நஷ்டஈடும் இறப்புச் சான்றிதழும் வேண்டாம்!” — OMP நிகழ்வைப் புறக்கணித்து யாழில் கண்டனப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைத்து சுயாதீனமான சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணியொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியப் பேரவை மற்றும் குடிசார் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணி, செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகி, கோவில் வீதி வழியாக நகர்ந்து முத்திரைச் சந்தியிலுள்ள கிட்டு பூங்காவைச் (சங்கிலியன் பூங்கா) சென்றடைந்து பொதுக் கூட்டத்துடன் நிறைவடையும். பேரணியின் முக்கிய கோரிக்கைகள்: சர்வதேச நீதி விசாரணை: செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேசக் கண்காணிப்பு மற்றும் நீதி விசாரணை பொறிமுறையை உருவாக்குதல். இனப்படுகொலைக்கு நீதி:…

பருத்தித்துறை இராணுவ முகாம்களை அகற்றக் கோரி செப்டெம்பர் 11இல் போராட்டம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றக் கோரி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி கவனயீர்ப்புப் போராடமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரின் அபிவிருத்தி மற்றும் விரிவாக்கத்திற்குத் தடையாகக் காணப்படும் இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றுவதுடன், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதை வலியுறுத்தும் வகையில் இடம்பெற உள்ளது. இப்போராட்டம் பருத்தித்துறை துறைமுக சந்தியில் ஆரம்பமாகும் இப்போராட்டம், பேரணியாகச் சென்று பிரதேச செயலகத்தைச் சென்றடையவுள்ளது. இப்பகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் ஒன்றிணைந்துக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிக்கான நீள்பயணம் – யாழில் இடம்பெற்ற பேரணி மற்றும் மாநாடு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள்பயணம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு 30.08.2026 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டை முன்னிட்டு, யாழ்ப்பாண நகரில் கவனயீர்ப்பு பேரணியும் இடம்பெற்றது. பேரணியின் முன்னிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் சென்றதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர். பின்னர் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், ரவிகரன் ஆகியோரும் உள்ளுராட்சி சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் கலந்துகொண்டனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், காணாமல்…

எமது நிலம் எமக்கு வேண்டும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

பரவிப்பாஞ்சானில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும், கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காலை 11 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “இராணுவமே, நீ உன் வீட்டுக்குப் போ; நான் என் வீட்டுக்குப்…