Category: செம்மணி
நஷ்டஈடும் இறப்புச் சான்றிதழும் வேண்டாம்!” — OMP நிகழ்வைப் புறக்கணித்து யாழில் கண்டனப் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைத்து சுயாதீனமான சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணியொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியப் பேரவை மற்றும் குடிசார் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணி, செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகி, கோவில் வீதி வழியாக நகர்ந்து முத்திரைச் சந்தியிலுள்ள கிட்டு பூங்காவைச் (சங்கிலியன் பூங்கா) சென்றடைந்து பொதுக் கூட்டத்துடன் நிறைவடையும். பேரணியின் முக்கிய கோரிக்கைகள்: சர்வதேச நீதி விசாரணை: செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேசக் கண்காணிப்பு மற்றும் நீதி விசாரணை பொறிமுறையை உருவாக்குதல். இனப்படுகொலைக்கு நீதி:…
