எமது நிலம் எமக்கு வேண்டும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

பரவிப்பாஞ்சானில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும், கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காலை 11 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “இராணுவமே, நீ உன் வீட்டுக்குப் போ; நான் என் வீட்டுக்குப்…