நஷ்டஈடும் இறப்புச் சான்றிதழும் வேண்டாம்!” — OMP நிகழ்வைப் புறக்கணித்து யாழில் கண்டனப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைத்து சுயாதீனமான சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணியொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியப் பேரவை மற்றும் குடிசார் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணி, செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகி, கோவில் வீதி வழியாக நகர்ந்து முத்திரைச் சந்தியிலுள்ள கிட்டு பூங்காவைச் (சங்கிலியன் பூங்கா) சென்றடைந்து பொதுக் கூட்டத்துடன் நிறைவடையும். பேரணியின் முக்கிய கோரிக்கைகள்: சர்வதேச நீதி விசாரணை: செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேசக் கண்காணிப்பு மற்றும் நீதி விசாரணை பொறிமுறையை உருவாக்குதல். இனப்படுகொலைக்கு நீதி:…

மாணவி கிருஷாந்தியின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் – செம்மணியில் உணர்வுபூர்வ அஞ்சலி!

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி குமாரசுவாமி கிருஷாந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கடந்த செப்டம்பர் 07-ஆம் திகதி செம்மணி நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி, அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் ஆகியோரின் நினைவாக இந்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்கள், கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதியும் பொறுப்புக்கூறலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையும் பரிகார நீதியும் கிடைக்கப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற அநீதிகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக் கூடாது என்றும் நினைவேந்தலில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

பருத்தித்துறை இராணுவ முகாம்களை அகற்றக் கோரி செப்டெம்பர் 11இல் போராட்டம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றக் கோரி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி கவனயீர்ப்புப் போராடமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரின் அபிவிருத்தி மற்றும் விரிவாக்கத்திற்குத் தடையாகக் காணப்படும் இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றுவதுடன், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதை வலியுறுத்தும் வகையில் இடம்பெற உள்ளது. இப்போராட்டம் பருத்தித்துறை துறைமுக சந்தியில் ஆரம்பமாகும் இப்போராட்டம், பேரணியாகச் சென்று பிரதேச செயலகத்தைச் சென்றடையவுள்ளது. இப்பகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் ஒன்றிணைந்துக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.